ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்த அமலாக்கத்துறை
#WorldTourismDay
ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையை நடத்தி வருகிறது இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் இருக்கக்கூடிய பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை ஈடுபட்டிருக்கிறது
ஜோதிமணி வீடு ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடு உட்பட தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பாக சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு முழுவதும் சுமார் 30 இடங்களிலே சோதனை மேற்கொண்டு வருகின்றன குறிப்பாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
டி நகரில் சரவணா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வீட்டில் சோதனை ஆனது மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இருக்கக்கூடிய தரைதளத்தில் இருக்ககூடிய பாஜக தலைமை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஜோதிமணி வீட்டிலும் வந்து தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அவரது வீட்டில் அவரது ஆவணங்களை ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் பாஜக தென் சென்னை மாவட்ட தலைவராக இருக்கக்கூடிய காளிதாஸ் என்பவரையும் ,பாஜக அலுவலக செயலாளர் சந்திரன் என்பவரையும், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்கு வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகத்திற்கும் ஜோதிமணி என்பவருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரண்டு பேரும் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டினார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜோதிமணி வீட்டிற்கு வந்தபோது அவர் வீட்டில் இல்லை என்பதால் ஒரு மணி நேரத்திற்கு காத்திருந்து அவர் வந்த பிறகு அவரது வீட்டிற்கு நுழைந்தும் ஐந்து பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தற்போது பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரை வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு ஜோதிமணி விசாரணையில் தெரியவந்திருந்தால் அந்த அக்கவுண்ட் அவர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட பல இடங்களில் மொத்தம் 30 இடங்களில் அமலாக்கத்துடைய அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பாக சட்ட விரோதமாக வெளிநாட்டில் ஏதும் சொத்துக்கள் ஏதும் வாங்கப்பட்டுள்ளதா எனவும் விசாரித்துவருகின்றனர்.
Tags
அரசியல்