இதை எதிர்பாராத ஐஸ்வர்யாவின் முகம் சட்டென்று மாறியது. ஐஸ்வர்யாவின் கழுத்தில் மாலை அணிவித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பலரும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த செயலுக்கு மன்சூரலிக்கான் கண்டனம் தெரிவித்ததுடன் அவரின் சார்பாக தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். பிறகு கூல் சுரேஷ் வருத்தம் தெரிவித்து வீடியோவை வெளியிட்டு இருந்தார். நடிச்சு தான் என்னால பெரிசவளர முடியல அதனால ஏதோ கிறுக்குத்தனமா சில வேலைகளை செய்து என்பொழப்பு ஓட்டிட்டு இருக்கேன் நான் பண்னது எல்லாமே தப்புதான் தான் ஒரு பொண்ணோட மனசு காயப்படுத்திட்டேன்னு நினைக்கிறப்போ உண்மையிலேயே வருத்தப்படுற அப்படின்னு வீடியோல பேசியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதி யூடுப் பேட்டிஒன்றில் அது நெனச்சா எனக்கு இன்னுமுமே அதிர்ச்சியாக இருக்கு அதுவும் என் தோள்பட்டையா பலவந்தமாக அழுத்தி யாரும் எதிர்பார்க்காத நொடியில் அப்படி நடந்துட்டார். ஒருத்தர் பொது மேடைல திடீர்னு இப்படி நடந்து விட்டால் என்ன செய்ய முடியும் கிறுக்குத்தனமா பண்றதுல கூட சில எல்லைகள் இருக்கு தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காத படி இருக்கணும்.
இதுக்கு முன்னாடியும் ஒரு நிகழ்ச்சியில என்கிட்ட வம்பு பண்ணி இருக்காரு பொதுவா இவரோட நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காதுங்கறது நிஜம்தான் அதனாலதான் இவரை மேடைக்கு கூப்பிடறப்போ வெறுமனே நடிகர் கூல் சுரேஷ் அப்படின்னு கூப்பிடுவேன். அப்படி கூப்பிடக்கூடாது எனக்கு யூடுப்பர் சூப்பர் ஸ்டார்னு பட்டம் இருக்கு அது சொல்லி என்னை கூப்பிட மாட்டீங்களா அப்படின்னு கேட்டார் அதனால இந்த முறை மாலையை தான் போட்டிருப்பார் எனநினைக்கிரேன் என தெரிவித்தார்.