தமிழக மக்களே உசார் !!
கேரளாவில்
நிபா வைரஸ் வேகமாக பரவிகிறது
நிபா வைரஸில் இறப்பு எண்ணிக்கை 40லிருந்து 70 சதவீதம் அதிகம் என இந்திய மருத்துவ கவுன்சில்
எச்சரித்துள்ளது. தற்காப்பு நடவடிக்கை அரசு எடுத்துள்ள துரித நடவடிக்கை என்ன என்பதையும் பற்றியும் பார்ப்போம்.
கொரோனாவிற்கே சவால்
விடும் அளவுக்கு அழிக்கும் தன்மை கொண்டதாக உருவெடுத்துள்ளது, நிபா வைரஸ் கொரோனா
பரிசளித்த துயரநாட்களின் வடுக்கள் மறைவதற்கு முன்பாகவே நிப்பா வைரஸ் கேரளாவில் தலை
தூக்கி விட்டது இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்ட நிலை 2 பேரை பலி வாங்கி விட்டது
நிப்பா கேரள மாநிலம் உஷாராகி தற்போது சுகாதாரத் துறையை முடுக்கி விட்டுள்ளது
பாதிக்கப்பட்டவர்கள் அவர்களோடு தொடர்புடையவர்கள் என எல்லோரையும் பரிசோதனை செய்து
கொண்டு வந்துள்ளன.
நிபா வைரஸின் சீற்றத்தை பார்த்தால் கொரோனாவே
தேவலாம் இன்னும் அளவிற்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் கவலை தெரிவித்துள்ளது அதாவது
கொரோனா வைரஸ் விதவிதமாக தெரிவு அடைந்தாலும் வரவும் தன்மை அதிகரித்தாலும் அதன்
இறப்பு விகிதம் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் தான் ஆனால் நிபா வைரத்தின் இறப்பு
விகிதம் 40 லிருந்து 70% வரை அதிகம் என கூறி உள்ளன. இதற்கு மோனோ குலோன் என்னும்
எதிர்ப்பு மருந்து தான் நமக்கு உயிர் காப்பான் எனக் கூறியுள்ளது.
முதற்கட்ட பரிசோதனை தான்
முடிந்துள்ளது முழுமையான சோதனைகள் முடிவடையவில்லை ஆனாலும் நிப்பா வைரஸ்
பாதிப்புக்காக உலக நாடுகள் 14 பேருக்கு இதை பயன்படுத்தி
பார்த்து இதில் அனைவரும் உயிர்பிழைத்துக்கொண்டன தற்போதைக்கு பத்து பேருக்கு
வழங்கும் அளவிற்கு தான் இம்மருந்து கைவசம் உள்ள நிலை 20 டோஸ் களை வாங்க உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் கூறி
உள்ளது.
மருந்து வரப்போகிறது என ஏனோ தானோ என்று இருக்க
வேண்டாம் கொரோனா காலத்தில் எப்படி முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருந்தோமோ அதையே
தற்போதும் பின்பற்றுவது நலம் எனக் கூறியுள்ளது
இந்திய மருத்துவ கவுன்சில் அது மட்டுமல்ல
சுத்தமான நீர் சுகாதாரமான உணவு நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் என
உஷாராக இருக்க எச்சரிக்கை மணி ஒலித்துள்ளனர், ஆபத்தை எதிர்நோக்க தமிழக மருத்துவமனைகளும்
தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன மீண்டும் துயரநாட்களை சந்திக்காமல் இருக்க
மருத்துவ கவுன்சிலின் எச்சரிக்கையை அக்கறையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என
மருத்துவர்கள் தரப்பில் கேட்டுக் கொண்டுள்ளன